அநுராதபுரம் வான்பரப்பில் பாரிய ஒலியுடன் மர்ம வெளிச்சம்

அநுராதபுரத்தின் வான் பகுதியில் நேற்று இரவு 8 மணியளவி;ல் பாரிய சத்தத்துடன் வெளிச்சம் ஒன்று தென்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இது எதனுடைய வெளிச்சம் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்தநிலையில் குறித்த வெளிச்சம் தொடர்பில் பலரும் தமக்கு அறிவித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தம்புள்ளை முதல் சேருவில வரையில் உள்ள மக்கள் இது தொடர்பில் அறிவித்துள்ளதாக நிலையம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post Next Post