(Kamsan&Sutha)வந்தாறுமூலையில் கார் ஒன்று துவிச்சக்கரவண்டியில் வந்தவருடன் மோதியதால் துவிச்சக்கரவண்டியில் வந்தவர் காயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்றையதினம் (14.08.2014) பிற்பகல் 4.00 மணியளவில் வந்தாறுமூலை பிரதானவீதி மாரியம்மன் ஆலயத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் துவிச்சக்கரவண்டியில் வந்தவர் தலையில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags:
வந்தாறுமூலை