(Sanjeevan)மாவடிவேம்பு ஏர்முனை மாற்றுத் திறனாளிகளின் அமைப்பு பணிமனை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று (12.08.2014) வைபவரீதியாக இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் திரு. உ.உதயசிறிதர் அவர்கள் கலந்துகொண்டு பணிமனையினை திறந்த வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று சமூக சேவைகள் உத்தியோகத்தர் திரு ராஜ்மோகன், மாவடிவேம்பு -02 கிராம உத்தியோகத்தர் திரு. பூ.அருள்நாதன், மாவடிவேம்பு -01 கிராம உத்தியோகத்தர் திரு.தி.லிங்கேஸ்வரன், மாவடிவேம்பு பிரதேச தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அமைப்பாளர் சி.திருப்பதி, வேர்ள்டவிசன் உத்தியோகத்தர் திரு அமலன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , ஏர்முனை அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.