(Sanjee) சித்தாண்டி சித்தி வினாயகர் வித்தியாலயத்தின் ஆசிரியை திருமதி சோமாவதி இளையதம்பி அவர்களின் 37 வருட சேவை கால நிறைவை முன்னிட்டு, அவரது சேவையை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று (30.07.2014) பாடசாலையில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பணி நலன் பாராட்டு விழாவில், ஆசிரியை திருமதி சோமாவதி இளையதம்பி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவு பாமாலையும் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலையின் அதிபர் திரு. க.பகீரதன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இப்பணி நலன் பாராட்டு விழாவில், ஆசிரியை திருமதி சோமாவதி இளையதம்பி அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் நினைவு பாமாலையும் வாசிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.