மனிதனின் நடமாட்டம் குறைந்த பகுதிகள் மனதிற்கு இதமான காட்சிகளைக் கொண்டனவாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் சித்தாண்டி பெருமாவெளி குழத்தினுள் அழகிய பறவைகளின் நடமாட்டத்தைக் காணக்கூடியதாகவுள்ளது. நீர் வற்றுக் காலம் ஆகையால் குழத்தினுள் உள்ள மீன் போன்ற உணவுகளை பிடித்து உண்பதற்காக இவை வேறிடங்களிலிருந்து கூட்டம் கூட்டமாக வருகை தருகின்றன.