சித்தாண்டி, வ.ம.ம. வித்தியாலயத்தில் நடைபெற்ற சிரமதான நிகழ்வு

(சுமதரன்) எதிர்வரும் 02.01.2013 அன்று அனைத்து பாடசாலைகளும் முதலாம் தவணைக்காக திறக்கப்படவுள்ளன. இந்த நிலையில் பாடசாலை சூழலை முன்கூட்டியே சுத்தம் செய்யும் சிரமதான நிகழ்வுகள் பல பாடசாலைகள் நடைபெற்று வருகின்றன. 


அந்தவகையில்  கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று (30.12.2013)  காலை 9.00 மணியளவில் சிரமதான நிகழ்வொன்று நடைபெற்றது. 

பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற இச்சிரமதான நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொலிஸ் அதிகாரிகள், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.






Previous Post Next Post