பாசிக்குடாவில் குளிர்பாண வர்த்தகரின் சடலம்

மட்டக்களப்பின் பிரபல வர்த்தகர் ஒருவர் பாசிக்குடா பகுதியில் உள்ள கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த இரண்டு தினங்களாக காணாமல்போன வர்த்தகரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பில் குளிர்பான முகவராக செயற்படும் செல்லையா மனோகரன் (52வயது)என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர் கடந்த இரண்டு தினங்களாக காணாமல்போனமை தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திலும் முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வர்த்தகரின் மோட்டார் சைக்கிளும் கடற்கரை பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சடலத்தை அவரது மகன் அடையாளம் காட்டியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது கொலையா தற்கொலையா என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Previous Post Next Post