புதுவருட நல்வாழ்த்துக்கள் - மாரிமுத்தன் செய்திகள்

புதுவருட தினத்தன்று எமது இணையத்தள வாசகர்களுக்கு வாழத்துக்களைத் தெரிவிப்பதில் நாம் பெருமகிழ்வடைகின்றோம். சித்தாண்டி மற்றும் சூழவுள்ள கிராமங்களைச் சார்ந்த செய்திகளை இணைய உலகில் கொண்டு வரவேண்டும் என்ற நோக்குடன் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் இன்று உங்களுடைய ஆதரவினால் வளர்ச்சியடைந்துள்ளது. சிறியதொரு பிரதேசத்து செய்தித்தளமானாலும் கிராமம் சார்ந்த பாடசாலை நிகழ்வுகள், ஆலய நிகழ்வுகள், அனர்த்தங்கள் என எம்மால் இயன்ற வரையில் தகவல்களைச் சேகரித்து வழங்கிக்கொண்டிருக்கின்றோம்.


எமது இணையத்தளத்தினை வளர்த்துச் சென்றதில் பலருடைய பங்களிப்புகள் உறுதுயைணாகவிருத்தது என்று கூறினால் அது மிகையில்லை. அந்த வகையில் ஒரு சிலரை இந்த நேரத்தில் நினைவுகூரக்கடமைப்பட்டுள்ளேன். முதலில் எனது செயற்பாடகளுக்கு உடல் உள ஆற்றலைத் தந்துதவிய இயற்கைக்கும் இறைவனுக்கும் நன்றிகூறுவதுடன், என்னை வளர்த்து ஆளாக்கிய அமரர் க.மாரிமுத்தன் அவாகளையும் இந்நேரத்தில் நினைவுகூருகின்றேன்.


1. ஆ.தேவராசா - இவர் இணையத்தளம் எதிர்நோக்கியிருந்த சில சிக்கல் நிலைமைகளை சீர்செய்து தந்ததுடன், தமது ஆலோசனைகளையும் வழங்கியவர்.

1. சி.பாரதிராசா - இவர் என்னுடைய இணையத்தளத்திற்க ஒளிப்பட கருவியையும், பேஸ்புக்போன்றவற்றில் பகிர்வவதன் அவசியம் பற்றியும் எடுத்துக்கூறியிரந்தார்.

2. இ.நித்தியானந்தன் - இவர் எமது இணைத்தளத்தில் வடிவமைப்புக்களை எவ்வாறு மேம்படுத்துவது பற்றியும், அதனுடைய உள்ளடக்கம் பற்றியும் ஆலோசனைகூறியவர்.

3. பூ.அருள்நாதன் (கிராமஉத்தியோகத்தர்) - கிராம உத்தியோகத்தர் என்ற வகையில் தமது ஆதரவை என்றும் வழங்கி வருபவர்.

மேலும் எமது இணையத்தளத்திற்கு ஒளிப்படங்களை அனுப்பவர்கள், செய்திகளுக்காக ஒளிப்படங்களை பிடிப்பவர்களுக்கும் இந்நேரத்தில் நான் நன்றி கூறியாக வேண்டும்.


- அணைவருக்கும் எமது புதுவருட வாழ்த்துக்கள் -

- மாரிமுத்தன் செய்திகள் -

Previous Post Next Post