பிலிப்பைன்ஸில் சன்-தின்ஹ் புயலினால் 24பேர் பலி

பிலிப்பைன்ஸில் வீசிவரும் சன்-தின்ஹ் [Tropical Storm 'Ofel' (international name: Son-Tinh) ]  புயலினால் இதுவரை 24பேர் பலியாகியுள்ளதுடன் 15 ஆயிரம் மக்கள் நேரடியாக பாதித்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. பிலிப்பைன்ஸின் மத்திய மற்றும் தெற்கு பகுதியிலேயே இந்த புயலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிலிப்பைன்ஸைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு 15 தொடக்கம் 20 புயல்கள் அல்லது சூறாவளிகளினால் மக்கள் அவதிப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே இந்த சன்-தின்ஹ் புயல் இப்போது பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

மேற்கு வியட்னாமிலிருந்து மணிக்கு 22 கிலோமீற்றர் என்னும் வேகத்தில் வீசிக்கொண்டிருக்கும் சன்-தின்ஹ் புயலின் தாக்கமே பிலிப்பைன்ஸையும் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.







Previous Post Next Post