உலக அழிவு நெருங்குகின்றதா? – ஓர் அலசல் (தொடர் 02)

கடந்த தொடரில் இலங்கையில் நிகழ்ந்து வருகின்ற சில அசாதாரண நிகழ்வுகள் பற்றி குறிப்பிட்டிருந்தோம். நாம் இங்கு நிகழ்ந்த அசாதாரண நிலைமைகள் ஒவ்வொன்றிற்குமான அறிவியல் ரீதியிலான விளக்கத்தை கொடுத்துக்கொண்டு கட்டுரையின் மையக் கருத்தை விட்டு விலகிச் செல்லாமல் நேரடியாகவே கட்டுரையின் மையக்கருத்தை நோக்கி இக்கட்டுரையினை நகர்த்திச் செல்லலாம் என நினைக்கிறேன்.

உலக அழிவு இவ்வருட இறுதியில் அல்லது இனிவரும் ஒரு சில ஆண்டுகளில் இடம்பெறும் என்பதற்கு பல ஆதாரங்கள் வழங்கப்படுகின்றன. அந்த ஆதாரங்கள் என்ன என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

1.    பைபிளின் கருத்து – பைளின் கருத்துப்படி உலக அழிவிற்கு முன்னராக இடம்பெறும் எனக் கருதப்பட்ட சில நிகழ்வுகள்.
2.    திருக்குர்ஆண் கூறும் கருத்து – குர்ஆணில் கூறப்படுகின்ற சில மாற்றங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றமை.
3.    மாயன் நாட்காட்டி – அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் எனப்படும் இனத்தவர்களின் நாட்காட்டியில் 2012 டிசம்பர் 21 உடன் முடிவடைதல்.
4.    நிபுரு கோள் - இருண்ட கோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசாவிடமிருந்து வெளிவந்திருக்கும் செய்தி.

பைபிளின் கருத்துக்கள்
கிறிஸ்தவர்களின் புனித நூலான பையின் கருத்துப்படி உலகின் இறுதிக்காலம் பற்றி குறிப்பிடப்படுகின்றது. அதாவது சந்திரன் சிவத்தது, சூரியன் கறுத்துப்போனது, வானத்து நட்சத்திரங்கள் பூமியில் விழுந்தது போன்ற எதிர்வுகூறல்கள் பைபிளில் கூறப்பட்டுள்ளது. பைபிளில் கூறப்பட்ட சில நிகழ்வுகள் அண்மைக்காலத்தில் நடந்துள்ளன. இந்த நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளமையும் பைபிளை அடிப்படையாகக் கொண்ட மதநம்பிக்கையாளர்களால் பூமி அழிவடைவதற்குரிய காலம் நெருங்கி விட்டதை உணர்ந்துள்ளார்கள்.


திருக்குர்ஆணின் கருத்துக்கள்
இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்களின் புனித நூலான திருக்குர்ஆணில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும் உலக அழிவு நெருங்கியிரப்பதை சுட்டிக் காட்டுக்காட்டுகின்றன. குறிப்பாக பூகம்பங்ள் மிகுதியாகும், மதுஅருந்துதல் அதிகரித்தல், ஆண்களுக்கு சமனாக பெண்களும் ஆடையணிதல் போன்ற பல நகிழ்வகள் இங்கு கூறப்பட்டுள்ளன. இதனடிப்படையிலும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள் புவி ஆபத்தைச் சந்திக்கும் தறுவாயில் உள்ளதாக நம்புகின்றார்கள்.


மாயன் நாட்காட்டி
மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் எனப்படும் இனத்தவர்களால் தயாரிக்கப்பட்ட மிகவும் பழைமை வாய்ந்த நாட்காட்டியே மாயன் நாட்காட்டி  ஆகும். மாயன் நாட்காட்டியில் குறிப்பிடப்பட்ட அனைத்து எதிhவு கூறல்களும் இதுவரையில் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக கிரகணங்கள் மற்றும் உலகில் இடம்பெற்ற காலநிலை மாற்றங்கள் பற்றிய முன்னறிவிப்பை இந்நாட்காட்டி தெரிவித்திருந்தது. அந்தவகையில் இந்நாட்காட்யடியின் எதிhவு கூறல்கள் யாவும் 2012 டிசம்பர் 21 உடன் நிறiவு பெறுகின்றன. அதாவது 2012 டிசம்பர் 21 இற்குப் பின்னர் அந்நாட்காட்டியில் எந்தவொரு தகவலும் காணப்படவில்லை.

2012 டிசம்பர் 21 உடன் இந்நாட்காட்டியானது நிறைவுக்கு வருவதனால் அன்றைய தினம்தான் உலகின் இறுதித் தினமாக இருக்கலாம் என்று வரலாற்று ரீதியிலான ஆய்வாளர்களால் குறிப்பிடப்படுகின்றது. அனைத்து நிகழ்வுகளையும் மிகத்துல்லியமாக கணித்துக் கூறப்பட்ட அந்நாட்காட்டியானது இவ்வாறு நிறைவுபெறுவதானது உலக அழிவு பற்றிய அச்சத்தை ஏற்படுத்திய முக்கியமான வரலாற்று ஆதாரமாகக் காணப்படுகின்றது.


நிபுரு கோள்

விண்வெளியை ஆய்வு செய்ய நாசாவினால் அனுப்பப்பட்ட விண்கலத்தினால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு இருண்டகோள்தான் நிபுரு கோள் என அழைக்கப்படுகின்றது. ஆரம்பத்தில் ஒரு மர்மப்பொருளாக விண்வெளியில் காணப்பட்ட இந்த இருண்ட நிபுருக்கோள் பற்றிய தகவல்கள் ஆரம்பத்தில் இரகசியமாகப் பேணப்பட்டு வந்தாலும் அவை பின்னர் வெளியே கசியத் தொடங்கியிருந்தது.

நிபுருக்கோளானது புவியின் பருமனை விட 5 மடங்கு பெரியதாகவும் காணப்படுகின்ற அதேவேளை இக்கோள் சூரியக் குடும்பத்தினுள் புவியை நோக்கி நகர்ந்து வருவதாக விண்வெளி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்னர். அத்துடன் இது எதிர்வரும் 2012 – 2015 ஆம் ஆண்டிற்கிடைப்பட்ட காலப்பகுதியில் புவியை அண்மிக்கும் என்று குறிப்பிடப்படுகின்றது.


அறியிவியல் ரீதியாக நிபுரு கோளின் வருகையினாலே புவி அழிவு நெருங்கி வருவதாக புவியியல், விண்வெளி ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். அடுத்த தொடரில் நிபுரு கோள் சூரியமண்டலத்தினுள் நுழைவதனால் ஏற்படும் தாக்கம் என்ன? அது புவிமீது தாக்கும்போது ஏற்படும் பாதிப்புகள் என்ன? போன்ற விடயங்களை  ஆராய்வோம்.
-  Akshayan -

உலக அழிவு நெருங்குகின்றதா? - அலசல் (தொடர் 01) வாசிப்பதற்கு பின்வரும் இணைப்பை சொடுக்கவும்.
http://marimuththan.blogspot.com/2012/10/01_22.html

Previous Post Next Post