சீகிரியா சுவரில் எழுதிய சித்தாண்டி யுவதி விடுதலை: மகிழ்ச்சியில் தாய்

சீகிரியாவில் சுவர் ஓவியத்தை சேதப்படுத்தினார் என்று குற்றம் சாட்டப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட சித்தாண்டியை சேர்ந்த யுவதி உதய ஸ்ரீ க்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.


இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..இவரின் விடுதலைக்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, கலாச்சார அமைச்சர் நந்தமித்ர ஏகநாயக்க , மற்றும் பிரதியமைச்சர் அஜித் பெரேரா ஆகியோர் பாடுபட்டதாகவும் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை மகளின் விடுதலைச் செய்தியைக் கேட்டு தாயார் மகிழ்ச்சியில் காணப்படுவததுடன், ஊடகங்களும் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு குறிப்பிட்ட யுவதியின் விடுதலைக்காக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.



Previous Post Next Post