
அத்துடன் உறுகாமம் குளத்தினுடைய வான்கதவுகள் தொடர்ந்தும் திறந்து விடப்பட்டுள்ள நிலையிலேய இருப்பதனால் உறுகாமம் குளத்தினுடைய நீர் பாய்ந்து வரும் பாதையிலுள்ள பிரதேச மக்கள் வெள்ளம் தொடர்பாக அவதானமாக இருப்பது முக்கியமானதாகும். தொடர்ந்தும் குளத்தினுடைய நீரேந்து பிரதேசங்களிலும், வடிநிலப் பிரதேசத்திலும், பாதிக்கப்படும் பிரதேசத்திலும் பலமான மழைவீழ்ச்சி நிகழுமாயின் வெள்ளம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.