சித்தாண்டியில் அனர்த்த முகாமைத்துவ கூட்டம்.

(Sanjee)ஏறாவூர்பற்று பிரதேச செயலாளர் பிரிருவுக்குட்பட்ட சித்தாண்டி-4 பிரதேசத்தில் இன்று (20.05.2014) பி.ப 3.00 மணியலவில் அனர்த்த முகாமைத்துவ குழு கூட்டம் இடம் பெற்றது .


 இப் பிரதேசம் அதிகளவு வெள்ள அனர்த்தத்திற்கு உட்படும் பிதேசம் என்பதால் கன்டி கப் நிறுவனத்தினால் இப் பிரதேசத்தில் அணர்த்த முகாமைத்துவ குழு அமைக்கப்பட்டு மாதாத்தம் இக் கூட்டம் நடாத்தப்பட்டு வருகின்றது;

இன்றைய கூட்டத்தின் போது நிறுவனத்தினால் கிடைக்கப்பட்ட அனர்த்த பாதுகாப்பு உபகரணங்களை களச்சியப்படுத்துவதற்கு தேவையான இடம் பற்றியும் மதகுகள், கால்வாய் அமைப்பது பற்றியும் கலந்துரையாடப்பட்டது.

இந் நிகழ்வின் போது கன்டி கப் நிறுவனத்தின் சித்தாண்டி பிரதேச பெறுப்பாளர் மற்றும் கன்டி கப் நிறுவனத்தின் சித்தாண்டி பிரதேச மக்கள் ஒருங்கினைப்பாளர் றூபன் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,உறுப்பினர்கள் ,மாதர்சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.













Previous Post Next Post