கைத்தொழில் புவியியல் நூல் வெளியீடு

சித்தாண்டி - மாவடிவேம்பு  தவசி லேணிங் சிற்றி கல்வி நிலையத்தில் ஆசிரியர் அக்சயன் அவர்களால் எழுதப்பட்ட மானிடப்புவியியலின் ஒரு பகுதியான கைத்தொழில் புவியியல் எனும்  நூல் நேற்று  (19.04.2014) வெளியிடப்பட்டது.


இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சித்தாண்டி மாவடிவேம்பு நலன்புரி அமைப்பின் தலைவர் திரு ஆ.தேவராஜா அவர்களும், சிறப்பு அதிதிகளாக சித்தாண்டி -1, மாவடிவேம்பு-2 கிராம உத்தியோகத்தர் திரு பூ.அருள்நாதன் அவர்களும்,  விசேட அதிதிகளாக தாதியர் உத்தியோகத்தர் திரு க.புவீந்திரன் அவர்களும், ஆசிரியர்களான திருமதி ஜெ.புவீந்திரன், திரு ஆ.சிறிதரன், திரு ஆர்.நாகேந்திரன் அவர்களும் கலந்துகொண்டதுடன், கல்வி நிலைய நிருவாகத்தினர் மற்றும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.

















Previous Post Next Post