க.பொ.த(சா/த) தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்

இவ்வருடம் வெளிவந்த க.பொ.த(சா/த) ல் கணிதம், விஞ்ஞானம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் 22.04.2014 அன்று வலயக்கல்வி அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் சென்றவருடம் மேற்படி பாடங்களை கற்பித்த ஆசிரியர்களும் இவ் வரும் கற்பிக்கும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.


 நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதிக்கல்விப்பணிப்பாளர் இக் கூட்டத்தினை ஆரம்பித்து வைத்தார். இக் கூட்டத்தில் 2012 ம் வருடத்திற்கும் 2013ம் வருடத்திற்குமான பெறுபேறுகளின் ஒப்பீட்டு பகுப்பாய்வும், கடந்த தவணையில் பாடசாலைகளில் இடம்பெற்ற தவணைப் புள்ளிகளின் பகுப்பாய்வும் திட்டமிடல் பிரதிக்கல்விப் பணிப்பாளரினால் முன்னளிக்கப்பட்டது. 

கடந்த வருடத்தில் ஆசிரியர்கள் செய்த பாட அடைவு முன்னேற்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது அவர்களின் அடைவு பரீசீலிக்கப்பட்டு இவ் வருடத்திற்கான அடைவுமட்ட ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கணித பாட, விஞ்ஞானபாட உதவிக்கல்விப்பணிப்பாளர்களும், சேவைக்கால பயிற்சி ஆலோசகர்களும் இவ் ஒப்பந்தத்தினை மேற்கொண்டனர்.

மேலும் நாளை புதன்கிழமை ஆங்கிலப்பாடத்திற்கான கூட்டமும், வெள்ளிக்கிழமை தமிழ், வரலாறு ஆகிய பாடங்களுக்கான கூட்டமும் நடைபெறும்.


Previous Post Next Post