கட்டுத்துவக்கு வைத்திருந்த மாவடிவேம்பு நபர் கைது

கட்டுத்துவக்கு வைத்திருந்ததாகக் கூறப்படும்  மாவடிவேம்பு விதானையார் வீதியைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.


கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள பெரியவெட்டுவானில் நேற்று இரவு கைது செய்ததாகவும், இவர் எதற்காக கட்டுத்துவக்கை வைத்திருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
Previous Post Next Post