உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் விளையாட்டுப் போட்டி

(Sanjee) கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் இல்ல விளையாட்டுப் போட்டி கடந்ம 18.03.2014ம் திகதி மிகவும் சிறப்பாக இடம் பெற்றது. இந்நிகழ்வானது அதிதிகளை வரவேற்றலுடன் ஆரம்பமாகி திரு.எஸ்.சுபாஸ்சந்திரன்(உதவிக் கல்வி பணிப்பாளர், கல்குடா கல்வி வலயம்)அவர்களால் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
இந்நிகழ்வானது பாடசாலை அதிபர் திருமதி.ம.மகேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இன் நிகழ்விற்கு முதன்மை அதிதியாக திரு T. அனந்தரூபன் (பிரதிக் பணிப்பாளர்,கல்குடா கல்வி வலயம்) அவர்களும் கௌரவ அதிதிகளாக கோட்டக் கல்விப் பணிப்பாளர் திரு.பொ.சிவகுரு அவர்களும், செல்வி.சீ. யோகேஸ்வரி(இணைப்பாளர்,முறைசாராக் கல்வி,கல்குடா கல்வி வலயம்)அவர்களும்,சிறப்பு அதிதிகளாக திரு.க.முரளிதரன்(திட்ட இணைப்பாளர் கெண்டிகெப் நிறுவனம் இலங்கை ,) அவர்களும், திரு.மு.திருக்குமரன்(முகாமையார்)அவர்களும் கலந்து கொண்டனர்.

விசேட அதிதிகளாக திரு.கரிகரன் (கிராம சேவை அலுவலர்) அவர்களும்,திரு.ந.திருநாவுக்கரசு (தலைவர் சித்தாண்டி ஸ்ரீ முருகன் கிரம அபிவிருத்தி சங்கம்)அவர்களும்,ஒலிம்பிக் தீபம் ஏற்றல் திரு.எஸ்.சுபாஸ் சந்திரனள்(உதவிக் ; கல்வி பணிப்பாளர்,கல்குடா கல்வி வலயம்) போன்றோர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்களின் நிகழ்வுகளும், மாணவர்களின் வினோத உடை மற்றும் உடற்பயிற்சி கண்காட்சியும்,பெற்றோர்களுக்கான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பரிசுப்பொருட்கள்  கெண்டிகெப் நிறுவனத்தின் நிதியுதவியினாhல் வழங்கப்பட்டது. இவ்விளையாட்டுக்களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்காண பரிசில்கள் அதிதிகளால் வழங்கப்பட்டது.




























Previous Post Next Post