பேரில்லாவெளி பிரதேசத்தில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி

பேரில்லாவெளி கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட அந்தியாவட்டவான்  பிரதேசத்தில் இன்று (04.01.2014) யானை தாக்கியதில் சித்தாண்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு குடும்பஸ்தர் பலியாகியுள்ளார்.  


சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளின் தந்தையான  61 வயதுடைய செல்லத்தம்பி - வினாயகமூர்த்தி (வினாசி) என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியருவதாவது,

இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தனது மேட்டுநிலப் பயிர்ச்செய்கை நிலத்திலிருந்து சுமார் 100 மீற்றர் தொலைவில் அமைந்துள்ள தற்காலிகமான கிணற்றை நோக்கி குளித்து விட்டு, நீரெடுத்து வரும்வேளையிலேயே பற்றைக் காட்டு வளைவில் அமைந்துள்ள மரத்திற்கு அருகாமையிலே நின்ற யானை குறிப்பிட்ட நபரைத் தாக்கியுள்ளது.

தாக்கிய நபர் ஸ்தலத்திலேயே உரிழந்துள்ளதுடன், தற்போது அவருடைய உடல் அவருடைய வசிப்பிடத்தில் இருந்து வாழைச்சேனை பொலிசாரினால் பொறுப்பற்கப்பட்டுள்ளதாக கூழவாடி பிரதேச வட்டையரான வடிவேல் அவர்கள் எமது தளத்திற்குத் தெரிவித்தார்.
Previous Post Next Post