பேரில்லாவெளியில் மோசமான நிலையில் வீடுகள்

கோறளைப் பற்று தெற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பேரில்லாவெளிப் பிரதேசத்திலுள்ள வீடுகள் மிகவும் மோசமான நிலையில் தற்போதும் சேதமடைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. 


பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் அரச சார்ப்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் இவை திருத்தித் தரப்படுமென அறிவிக்கப்பட்டு ஒரு வருடமாகியும் கூட இன்னும் இந்த நிலையிலேயே காணப்படுவதாகக் குறிப்பிட்ட பிரதேச வாசி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாக குறிப்பிட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Previous Post Next Post