விஷப்பரீட்சைக்கும் தயாராகும் விஜயகாந்த்!

டிகர் விஜயகாந்த்தின் இரண்டு மகன்களில் ஒருவரான  சண்முகபாண்டியன் விரைவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் என்று கடந்த சில வருடங்களாக செய்திகள் உலா வந்து கொண்டிருந்தது.


முதன் முதலாக என் மகன் சினிமாவில் ஹீரோவாக நடிக்கப்போகிறான் என்று விஜயகாந்த் அறிவித்ததும் தான் தாமதம் பல டைரக்டர்கள் அவர் வீட்டுக்கதவைத் தட்டி பல ஆக்‌ஷன் கதைகளைச் சொல்லக் கிளம்பினார்கள். ஆனால் எந்த கதையும் வேண்டாம் என்று கூறிவிட்ட விஜயகாந்த் கொஞ்சநாளைக்கு அந்த முயற்சியை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்.

ஆனால் இதுவரை அது குறித்து எந்தவொரு முழுமையான தகவல்களையும் முறைப்படி தெரிவிக்காத விஜயகாந்த் தன் மகன் நடிப்பு பற்றி புதிய தகவலை வெளியிட்டிருக்கிறார்.

ஆமாம், இதுகுறித்து சமீபத்தில் திருவாய் மலர்ந்திருக்கு விஜயகாந்த், “தமிழக காவல்துறை நடுநிலைமையுடன் செயல்படாமல் பாரபட்சம் காட்டுகிறது. ஆளுங்கட்சியிடம் ஒரு மாதிரியும், எதிர்க்கட்சியிடம் ஒரு மாதிரியும் அவர்கள் நடந்து கொள்கிறார்கள்.

ஆனால் ஒரு காவல்துறை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எனக்கு நன்றாகத் தெரியும். நான் பல படங்களில் போலீஸ்காரனா நடிச்சிருக்கேன். என் பையனும் நடிக்க வர்றான். அவனுக்கும் போலீஸ் ட்ரெஸ் போட்டுத்தான் நடிக்க வைப்பேன். போலீஸ்காரன்னா எப்படி நடந்துக்கணும்னு அதைப்பார்த்து இப்போ இருக்கிற போலீஸ்காரர்கள் தெரிஞ்சிக்கணும்” என்று ஆவேசமாக பேசினாராம்.

Previous Post Next Post