முறக்கொட்டான்சேனை இராமகிருஸ்னா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி பாடசாலையின் அதிபர் சண்முகதாஸ் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்விற்கு பிரதம அதிதியாக முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களும் , சிறப்பு அதிதிகளாக கோட்டக்கல்வி அதிகாரி குணலிங்கம் , கல்குடாவலய கல்வி அதிகாரிகள் மற்றும் பிரதேசத்தின் பொது அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள். விளையாட்டில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு முன்னாள் முதல்வர் பரிசில்களை வழங்கி வைத்தார்.