சித்தாண்டியில் முதலுதவிக் கருத்தரங்கு

சித்தாண்டி 01 மூத்தபிஜைகள் சங்கக் கட்டடத்தில்  இன்று (17.03.3013) காலை இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் பிரதேச சங்க உறுப்பினர் தெரிவும், முதலுதவிக் கருத்தரங்கும் இடம்பெற்றது. இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் முதலுதவிப் போதனாசிரியர் ஆ.சோமசுந்தரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வினை சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்.


இந்நிகழ்வில் மாவவேம்பு 02 இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சி.திருப்பதி, இலங்கை செஞ்சிலுவைச் சங்க முதலுதவி இணைப்பாளர் சீ.கஜேந்திரன் மற்றும் சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர், யுவதிகளும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் சித்தாண்டி -01, மாவடிவேம்பு 02 ஆகிய பிரதேசங்களுக்கான இளைஞர் குழு தெரிவு செய்யப்பட்டதுடன், செஞ்சிலுவைச் சங்கத்தினரால் முதலுதவி பற்றிய கருத்துரைகளும் வழங்கப்பட்டன.





Previous Post Next Post