சித்தாண்டியில் சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள தொழில்வாய்ப்பற்ற இளைஞர், யுவதிகளுக்கான சுயதொழில் வழிகாட்டல் கருத்தரங்கு நேற்றைய தினம் (28.02.2012) சித்தாண்டி -01 முதியோர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

சித்தாண்டி 01 அபிவிருத்திக் குழுத் தலைவர் ஆ.தேவராஜா அவாகளின் தலமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சித்தாண்டி 01, மாவடிவேம்பு 02 கிராம உத்தியோகத்தர் பூ.அருள்நாதன், மட்டக்களப்பு பனை அபிவிருத்தி திணைக்களத்தின் இணைப்பதிகாரி த.விஜயன் மற்றும் போதனாசிரியர் செல்வி A.G.R.ஜெகராணி , மாவடிவேம்பு 02 இளந்தளிர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் சி.திருப்பதி, மாவடிவேம்பு 02 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் பொ.வரதராஜன், சித்தாண்டி 04 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.சவுந்தராஜன், சித்தாண்டி 01 பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.சுப்பிரமணியன் மற்றும் பிரதேச யுவதிகளும் கலந்துகொண்டனர்.





Previous Post Next Post