தொழிநுட்பக் கல்லூரிகளுக்கு விண்ணப்பித்தல்

மட்டக்களப்பு  மாவட்டத்தில்  இயங்கும் அரச தொழிற்பயிற்சி நிலையங்களில் 2013ஆம் ஆண்டில் பயிற்சிநெறிகளை தொடர்வதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 தொழிற்பயிற்சி நிலையங்களினுடாக வழங்கப்படும் 42 பயிற்சிநெறிகளுக்குமே இளைஞர் யுவதிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.  


இதற்கேற்ப மட்டக்களப்பு மாவட்டத்தில் வந்தாறுமூலை தொழிற்பயிற்சி வளாகத்தினாலும், ஆரையம்பதி தொழிற்பயிற்சி நிலையம், வாழைச்சேனை தொழிற்பயிற்சி நிலையம், வெல்லாவெளி தொழிற்பயிற்சி நிலையம், காத்தான்குடி தொழிற்பயிற்சி நிலையம் , ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையம், ஏறாவூர் மற்றும் கல்லடி தொழிற்பயிற்சி நிலையங்கள்,பட்டிப்பளை மற்றும் வாகரை தொழிற்பயிற்சி நிலையங்கள், களுவாஞ்சிக்குடி மற்றும் ஓந்தாச்சிமடம் தொழிற்பயிற்சி நிலையங்கள் ,   வவுணதீவு தொழிற்பயிற்சி நிலையம், செம்மண்ணோடை தொழிற்பயிற்சி  நிலையம் போன்ற பயிற்சி நிலையங்களினால் கோரப்பட்ட பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

பயிற்சி நெறிகள் பற்றிய மேலதிக தகவல்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட தலைமை அலுவலக தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
தொ.பே.:-0652240159 





Previous Post Next Post